×

கல்லூரியில் கருத்தரங்கம்

 

தேனி, ஜூலை 27: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் மாணவர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நுகர்வோரின் அனுபவங்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.

உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி துணை முதல்வருமான சுசிலா சங்கர் வரவேற்றார். இதில், கல்லூரியின் செயலாளர் காசிபிரபு, இணை செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோரின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

The post கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Nadar Saraswathi College of Arts and Sciences ,Vadaputhupatti ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!